பாஜக கவுன்சிலர் திமுகவுக்கு பாய்ச்சல்
சென்னை:சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவுக்குப் பாய்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அதிமுகவுக்கு நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே கிடைத்தனர். அதேபோல மதிமுகவுக்கு ஒரு கவுன்சிலர்கிடைத்தார்.
தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் 2 உறுப்பினர்களும், மதிமுக உறுப்பினரும், திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் 99 கவுன்சிலர்களின்தேர்தல் குறித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்ற முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களையும் ராஜினாமாசெய்யக் கூறினார்.
அதன்படி 98 பேரும் ராஜினாமா செய்தனர். பின்னர் நடந்த மறு தேர்தலிலும் தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு கவுன்சிலர்கள் கிடைத்தனர்.தேமுதிக 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே தேமுதிக கவுன்சிலர் சர்தார் என்பவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார். இந்த நிலையில்,பாஜகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரும் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
49வது வார்டிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமார் என்பவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில்இணைந்தார்.
இந்த இணைப்பின்போது கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்,மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று திமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு பிற கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அடுத்தடுத்து திமுகவில் போய் இணைந்து வருவதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications