பஸ் எரிப்பு-25 அதிமுகவினரின் தண்டனை நிறுத்திவைப்பு!: நிபந்தனை ஜாமீனில் விடுதலை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தர்மபுரிபஸ் எரிப்பு வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரின் தண்டனையையும் நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த 25 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்கவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

ஊழல் வழக்கில் மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும்அதிமுகவினர் வெறியாட்டம் போட்டனர்.

தர்மபுரியில் கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தை மறித்து அதிமுகவினர் தீவைத்து எரித்தனர். இதில்கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் ப>தாபமாக கருகி இறந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி 3 பேருக்குத் தூக்குத்தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் 25 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியம், பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, 25 பேருக்கும் ஜாமீன் அளிக்கக் கூடாது எனஎதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 25 பேர் மீதான தண்டனையைநிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.

25 பேரும் தலா ரூ. 25 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும்.மறு உத்தரவு வரும் வரை சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும்கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் நிபந்தைனை விதித்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+