ஏழைகளுக்கு கருணாநிதி உதவிக்கரம்!
சென்னை:கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 43 ஏழைகளுக்கு ரூ. 2,20,000 மதிப்புள்ள மருத்துவ மற்றும் கல்வி உதவித் தொகையை முதல்வர்கருணாநிதி வழங்கினார்.
இதுகுறித்து திமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ. 5 கோடி நிதி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்துஏழை, எளியவர்களுக்கு மருத்துவ, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று 43 பேருக்கு ரூ. 2,20,000 நிதியுதவி வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த உதவியை வழங்கினார்.
இதற்கு முன்பு 2005ம் ஆண்டு நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் ரூ. 39 லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு மருத்துவம் மற்றும்கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி 10ம் தேதி சென்னையில் தொடங்கிய 30வது புத்தகக் கண்காட்சிக்கு இந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடியை கருணாநிதிநன்கொடையாக வழங்கினார்.
மீதமுள்ள ரூ.4 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து தொடர்ந்து ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications