இந்தியாவின் வெற்றிக்காக 10 அடியில் பத்தி!
சென்னை:உலகக் கோப்பக்ை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டி, சென்னை மெரீனாகடற்கரையில் 10 அடி உயரமுடைய ஊதுவத்தி ஏற்றப்பட்டது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, இந்திய ரசிகர்கள் தங்களது பாணியில் பலவிதமானபிரார்த்தனைகள், வழிபாடுகள், யாகங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையிலும் இப்படி வித்தியாசமான ஒரு நிகழ்வு நடந்தது. சென்னை மெரீனா கடற்கரையில், 10 அடி உயரமுடைய பிரமாண்டஊதுவத்தி பொருத்தப்பட்டு அது கொளுத்தப்பட்டது.
சைக்கிள் பிராண்ட் நிறுவனம் இந்த ஊதுவத்தியை உருவாக்கி நிறுவியுள்ளது. இந்தியாவின் வெற்றிக்காக இந்த ஊதுவத்தி கொளுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், இந்த ஊதுவத்தியை, ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று ஏற்றி வைத்தார். பெரும் திரளானோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடற்கரைக்கு வருவோரை இந்த வித்தியாச ஊதுவத்தி வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.












Click it and Unblock the Notifications