பள்ளி பீரோ தலையில் விழுந்து மாணவி பலி
திருச்செந்தூர்:தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழைய காயல் பகுதியில் பள்ளியில் இருந்த பீரோ தலையில் விழுந்ததில் 14 வயது மாணவிபரிதாபமாக பலியானார்.
பழைய காயல் அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யா (14). பழையகாயல் புனித மரியன்னை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற திவ்யா மாலையில் வகுப்பு முடிந்ததும், வகுபபறையில் இருந்த பீரோ அருகே வைக்கப்பட்டிருந்த தனது பையைஎடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பீரோ அப்படியே திவ்யா மீது சரிந்தது.
இதில் திவ்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே திவ்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை சிஸ்டர் ஆரோக்கிய மேரி கூறுகையில், அந்த பீரோவில் புதிய புத்தகங்களை வைக்கத்திட்டமிட்டிருந்தோம். திவ்யா தனது புத்தகப் பையை எடுக்க முயன்றபோது பீரோ அவர் மீது சாய்ந்துள்ளது.
நிலை தடுமாறி கீழே விழுந்த திவ்யாவின் தலையில் பலத்த அடிபட்டது. மேலும் அவரது தலை வகுப்பறையில் இருந்த மேசையில் பின்புறமாகமோதியதால்தான் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications