இலங்கை மீனவர்கள் நடுக் கடலில் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்து அவர்களின் படகுகளையும்பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோரக் காவல் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் பகுதியில், 2படகுகளில் சிலர் இருப்பது தெரிய வந்தது.
அவர்களை மடக்கி விசாரித்தபோது, அதில் இருந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிய வந்தது. வழிமாறி இந்தியப்பகுதிக்குள் வந்து விட்டதாக அவர்கள் கடலோரக் காவல் படையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 10 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications