சென்னை-அமெரிக்கா நேரடி கப்பல் சர்வீஸ்!
சென்னை:சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து கிளம்பும் கப்பல்கள் 28 நாட்களில் அமெரிக்காவை சென்றடையும்.
சர்வதேச கப்பல் நிறுவனமான மெர்ஸ்க் ஷிப்பிங் நிறுவனம் இந்த நேரடி அமெரிக்க சரக்குக் கப்பல் போக்குவரத்தை துவங்கியுள்ளது. மெர்க்ஸ்ஜிபோடி என்ற முதல் கப்பல் நேற்று அமெரிக்கவுக்குக் கிளம்பியது.
இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் சுரேஷ் கூறுகையில்,
இதுவரை சென்னையில் இருந்து சரக்குகள் கொழும்
ஒவ்வொரு துறைமுகத்திலும் சரக்குகளை இறக்கி வேறு கப்பலுக்கு மாற்ற வேண்டி இருந்தது. இதனால் சென்னையில் இருந்து சரக்குகள் அமெரிக்காசென்றடைய 35 முதல் 40 நாட்களாகி வந்தன.
ஆனால், இப்போது இந்த நேரடி கப்பல் போக்குவரத்து காரணமாக 28 நாட்களில் அமெரிக்காவிற்கு சரக்குகள் சென்றடையும்.
வரும் மே மாதம் முதல் சென்னை துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்துக்கும் நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படஉள்ளது என்றார் சுரேஷ்.
சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய மெர்க்ஸ் ஜிபோடி சரக்குக் கப்பல் 294 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 5,100கன்டெய்னர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
சென்னை துறைமுகத்திற்கு இவ்வளவு பிரமாண்ட கப்பல் வருவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications