விடுதலைப் புலிகளின் ஆயுதப் படகு தகர்ப்பு
கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆயுதம் கடத்தி வந்த படகைத் தாக்கித் தகர்த்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கிழக்கிலும், வடக்கிலும் உள்ள விடுதலைப்ப புலிகளின்நிலைகள் மீது இலங்கை பாதுகாப்புப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புலிகளின் ஆயுதப் படகு ஒன்றை தாக்கி அழித்து விட்டதாக கடற்படை கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், நேற்று நள்ளிரவு கிழக்கில் உள்ள அருகம்பே பகுதியிலிருந்து 400 கி.மீ தொலையில் சந்தேகத்திற்கிடமானமுறையில் வந்து கொண்டிருந்த படகை தடுத்து நிறுத்த முயன்றோம்.
ஆனால் அந்த படகில் வந்தவர்கள் படகை நிறுத்தவில்லை. மேலும் எங்கள் மீது பீரங்கித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தப் படகு மீதுகடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் அந்தப் படகு முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விட்டனர்.
அந்தப் படகு விடுதலைப் புலிகளின் படகு, அதில் ஏராளமான ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இந்தப் படகில் 12விடுதலைப்புலிகள் இருந்ததாக சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.
கடந்த மாதம்தான் தோண்ட்ரா முனை பகுதியில், புலிகளின் படகு ஒன்று தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு படகு தகர்க்கப்பட்டுள்ளதாககடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications