ஜெ.வின் பொறாமைப் போராட்டம்: வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசியல் பொறாமை காரணமாகவே அதிமுக பொதுச் செயலாளர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று மத்திய திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரி ஜெயலலிதாநடத்தியுள்ள போராட்டம் அரசியல் பொறாமையால் நடந்த ஒன்று.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குச் சாதகமான தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து அரசியல் தலைவர்களும், கட்சிப் பாகுபாடுகளைமறந்து ஒருமித்து செயல்பட வேண்டும். இதில் அரசியல் இருக்கக் கூடாது.

ஆனால், ஜெயலலிதா போன்ற, பல்வேறு பெரிய பொறுப்புகளை வகித்தவர்கள், பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, இந்தப் பிரச்சினையில்அரசுக்கு ஒத்துழைப்பாக நடக்க முன்வர வேண்டும்.

நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யும். விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கைஎடுக்கும்.

எனவே இதுபோன்ற போராட்டங்கள் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நட்புறவைக் கெடுப்பது போல ஜெயலலிதா போன்றவர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+