சூட்கேஸில் மிதந்து வந்த பஞ்சலோக முருகன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பஞ்சலோக முருகன் சிலை உள்ளிட்டவை கடலில் மிதந்து வந்தன. அவற்றை போலீஸார் மீட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில், முருகன், கல்விநாதன் ஆகிய இரு இளைஞர்களும் ஹாயாக உட்கார்ந்திருந்தனர். அப்போதுகடலில் ஏதோ மிதந்து வருவதைப் பார்த்தனர்.
உடனடியாக என்ன என்று பார்க்க அருகில் சென்றபோது அது ஒரு சூட்கேஸ் எனத் தெரிய வந்தது. அந்த சூட்கேஸை எடுத்த அவர்கள் திறந்துபார்த்தனர்.
அப்போது அதில், ஒரு அடி உயரமுடைய முருகன் சிலை, நகைகள், ஏழு பட்டு சேலைகள் மற்றும் பிற பொருட்கள் இருந்தது கண்டு திடுக்கிட்டனர்.சிலை பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
அந்த சூட்கேஸையும், அதில் இருந்த பொருட்களையும் போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
பஞ்சலோக சிலை உள்ளிட்டவை கடலில் வந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications