ரிலையன்ஸ் கடைகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:ரிலையன்ஸ் மொத்தக் கடைகளை மூடக் கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடுவதை கண்டித்தும், ரிலையன்ஸ் கடைகளை மூடக்கோரியும் ராமதாஸ் தலைமையில்பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சில்லரை வணிகத்தில் ஈடுபடும் ரிலையன்ஸ் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும், ரிலையன்ஸ்க்கு கொள்ளை லாபம், சில்லரை வியாபாரிகளுக்கு பட்டை நாமம் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.
சில்லரை வியாபாரிகள் நசுக்கப்படுவதை சித்தரிக்கும் வகையிலான பேனர்களை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிறுவனத்தால்ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.
இந்த துண்டுப் பிரசுரங்களை கடை, கடையாக ஏறி ராமதாஸ் வியாபாரிகளிடம் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வணிகத்தின் ஈடுபடுவதால் தமிழ்நாட்டில் 50 லட்சம் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம். இப்போது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் விரைவில் சில்லறைவணிகத்துக்கு வர இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.6,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோருக்குவேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் லட்சணக்கானோருக்கு வேலை பறிபோய் உள்ளது. இதை அனுமதிக்க முடியாது. ஆன்லைன் வர்த்தகத்தைதடை செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் ரிலையன்ஸ் விஷயத்தில் வாய் திறக்காதது ஏன்?
இந் நிறுவனம் கடைகளை மூடிவிட்டு ஓட வேண்டும். இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவேன். எல்லா ரிலையன்ஸ் கடைகள் முன்பும்நின்று கொண்டு, வாடிக்கையாளர்களிடம் அந்த கடைகளுக்கு செல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுப்போம். இந்த பிரச்சனையைசட்டமன்றத்திலும் எழுப்புவோம் என்றார்.












Click it and Unblock the Notifications