காஞ்சி. பெரியவர் நினைவாக மகா தீபஸ்தம்பம்
காஞ்சிபுரம்:
காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்பட்ட, மறைந்த காஞ்சி சங்கராச்சிராயர் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நினைவாக காஞ்சிபுரம் அருகேஓரிக்கையில் நினைவரங்கம் அமைக்கப்படுகிறது. அங்கு 51 அடி உயரத்தில் மகா தீபஸ்தம்பம் நிறுவப்படவுள்ளது.
சங்கர மடத்தின் 68வது மடாதிபதியாக இருந்தவர் மறைந்த காஞ்சிப் பெரியவர். அவரது நினைவாக காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கையில்,நினைவரங்கம் அமைக்க சங்கர மடம் தீர்மானித்துள்ளது. இங்கு 51 அடி உயரத்தில் மகா தீபஸ்தம்பமும் அமைக்கப்படுகிறது.
இதற்காக, ஆந்திரா மாநிலம் குப்பதிலிருந்து 70 டன் எடை கொண்ட பிரமாண்ட கல், ஓரிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைத்து மகாதீபஸ்தம்பம் உருவாக்கப்படவுள்ளது.
பெரியவர் நினைவிடம் ரூ. 14 கோடி செலவில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுள்ளது. 100 கால் மண்டபம் கொண்டதாக இது அமைகிறது. சோழ,பல்லவ, நாயக்கர் காலத்து கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்படும்.
அடுத்த ஆண்டு இந்த நினைவு அரங்கத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications