பெண் கற்பழித்து கொலை-பாதி எரிந்து கிடந்த உடல்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு கிடந்தார்.
குன்னம் அருகேவுள்ள அருமகல்சருக்கு பாலம் என்ற இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது.
மெட்டி அணிந்து இருந்ததால் அவர் திருணமானவராக இருக்காலம் என்று தெரகிறது.
இளம்பெண் கொலை செய்யப்பட்ட பகுதியில் ஏராளமான வெளிமாநில பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெண் பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கிடந்தன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலை செய்தவர்கள் அவரது முகத்தை கல்லால் சிதைத்துள்ளனர். மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications