கணவன் முன் யானை மிதித்து மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:கணவன் கண் முன்பாகவே மனைவியை யானை மிதித்து கொன்றது.
நீலகிரி மலைப் பகுதியில் உள்ள கூடலூரில் மூங்கில் வெட்டும் தொழிலாளியான பொன்னுசாமி, அவரது மனைவி சந்திரா (38) மற்றும் சிலரும் வேலைக்கு செல்வதற்காக வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் யானைகள் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அதை பார்த்தும் எல்லோரும் அலறியடித்து ஓடினர். சந்திராவால் ஓட முடியவில்லை. அதனால் அங்கேயே செடி மறைவில் உட்கார்ந்து விட்டார்.
அவர் அருகே வந்த ஒரு யானை அவரை தன் தும்பிக்கையால் தூக்கி போட்டு மிதித்தது. இதை பார்த்த பொன்னுசாமியும்,மற்றவர்களும் கத்த ஆரம்பித்ததால் யானை காட்டுக்குள் சென்றது.
பின்னர் படுகாயத்துடன் இருந்த சந்திராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications