போலி பாஸ்போர்ட்: இங்கிலாந்தில் 6 இந்தியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்:போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பிர்மிங்காம் நகரிலிருந்து கனடா தலைநகர் டோரண்டோவுக்கு செல்ல முயன்ற இந்தியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குஷ்தீப் சிங் (27), சபி சிங் (22), குர்ஷன்ஜித் சிங் (29), பால் சிங் (29), ஜகுரூப் சிங் மான் (26), ஜக்தர் சிங்(26). இவர்கள் 6 பேரும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு வந்தனர்.

அங்கிருந்து கனடா செல்ல காத்திருந்தனர். அப்போது அவர்களு பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் சோதித்தபோது அவை போலி பாஸ்போர்ட் எனத் தெரிய வந்தது. போலியான இங்கிலாந்து பாஸ்போர்ட் மூலம் ஆறு பேரும் டோரண்டோ செல்ல முயன்றனர்.

இதையடுத்து ஆறு பேரும் கைது செய்யப்பட்டு வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் கோல், 6 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். சிறைத் தண்டனை முடிந்ததும் 6 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஜக்ரூப் சிங் மான், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை வருவதற்கு இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியுள்ளார். இங்கிலாந்திருந்து கனடா செல்ல போலி இங்கிலாந்து பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியுள்ளார்.

இதேபோலத்தான் மற்றவர்களும் செய்துள்ளனர். ஜக்தர் சிங் போலி பாஸ்போர்ட்டுக்காக 3000 பவுண்டுகளை செலவிட்டுள்ளார். கைதான ஆறு பேரும் கனடாவில் புது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக இவ்வாறு சென்றதாக கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+