For Daily Alerts
Just In
நாளை நாடாளுமன்றம் கூடுகிறது
டெல்லிநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆள் கடத்தல் விவகாரத்தில் பாஜக எம்.பி சிக்கியுள்ள விவகாரம் நாடாளுமன்றத்தில் அணலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நாளை 2வது கட்ட கூட்டத் தொடர் தொடங்குகிறது.
ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா விவகாரத்தை பெரிதாக கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுதவிர இட ஒதுக்கீடு பிரச்சினை, விலைவாசி உயர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீரில் படைகளைக் குறைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் அணலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
மே 22ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
bjp பாஜக எம்பி thatstamil tomorrow parliament national indian politics ஆள் கடத்தல் headlines india news online budget session second phase updates katara நாடாளுமன்ற
Story first published: Wednesday, April 25, 2007, 5:30 [IST]