நுழைவுத் தேர்வு ரத்து: தடை வாங்குவதைதடுக்க சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு
டெல்லி:தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அஸ்வின்குமார் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லும் என சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கணேசன் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் விஸ்வநாதன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுக்கும் நோக்கில் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தடை கோரி யாராவது மனு தாக்கல் செய்தால், தமிழ அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இந்த ஆண்டு முதலே நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதனால்தான் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications