For Daily Alerts
Just In
ரூ.125 கோடியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம்
சென்னை:சென்னையில் ரூ.125 கோடி செலவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அன்பழகன் பேசுகையில், சென்னை தரமணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும். இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. ரூ.125 கோடியில் இந்த மையம் அமையவுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்.
தொகுதி சீரமைப்பு தொடர்பாக பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு தொகுதி சீரமைப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார் அன்பழகன்.
Comments
chennai சென்னை சட்டசபை அமைச்சர் thatstamil பணி கோரிக்கை anbazhagan அன்பழகன் சீரமைப்பு தரமணி tamil news செம்மொழி ஆய்வு மையம்
Story first published: Wednesday, May 2, 2007, 5:30 [IST]