22 இலங்கை அகதிகள் ராமேஸ்வரம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:இலங்கையிலிருந்து 22 தமிழர்கள் அகதிளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மீண்டும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 22 பேர் மண்டபத்திற்கும், திருவாடனை கடற்கரைக்கும் வந்திறங்கினர்.
உரிய விசாரணைக்குப் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளாக வந்த தமிழர்கள் கூறுகையில், இலங்கையில் கடும் சண்டை நடந்து வருவதாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் கூறினர்.












Click it and Unblock the Notifications