எழுதிக் கொடுத்த அறிக்கையும் ஜெவும்-ஆற்காடு தாக்கு
சென்னை:எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ஜெயலலிதாவுக்கு பிறரைப் பற்றி பேசவோ, எழுதவோ, பிறர் எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த அருகதையும் இல்லை என்று திமுக பொருளாளரும் மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமானங்கள் வாங்கியிருப்பது ஒரு தனியார் நிறுவனம் (சன் டிவி குழுமம்). அந்த நிறுவனத்துக்கும் கருணாநிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் பலமுறை தெரிவிக்கப்பட்ட பின்னரும், அரசியல்ரீதியாக கருணாநிதி மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாததால்,
தனியார் நிறுவனத்தின் மீது பெறாமைப்பட்டு அறிக்கை விடுவது ஏன். உங்களிடம் பணியாற்றிய அதிகாரியின் திருமண வரவேற்புக்கு கோடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் தோழியோடு வந்துவிட்டு போன செலவு ரூ. 60 லட்சம்.
அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன. எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கி, நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு பிறரைப் பற்றி பேசவோ, எழுதவோ, பிறர் எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த அருகதையும் சுத்தமாக இல்லை என்று கூறியுள்ளார் ஆற்காடு.












Click it and Unblock the Notifications