பாஜக-அதிமுகவின் சேது பயம்- வீரமணி
திருப்பூர்:சேது சமுத்திர திட்டத்தால் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற பயத்தில் பாஜகவும் அதிமுகவும் ராமர் பாலத்தை கையில் எடுத்துள்ளன என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ராமர் பாலம் அழிக்கப்படுவதாக தவறான கருத்தை மதவாத சக்திகள் பரப்பி வருகின்றன.
திமுகவின் செல்வாக்கை அளிக்க பாஜகவும் அதிமுகவும் முயன்று வருகின்றன. இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதே அதிமுக ஆட்சியில் தான். அதைத் தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
திட்டம் செயல்பட்டால் எல்லா நல்ல பெயரும் திமுகவுக்குப் போய்விடுமே என்ற பயத்தில் பொய்யை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
ராமர் பாலத்தை கையில் எடுத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். ராமர் பாலம் குறித்த உண்மை நிலையை விளக்க திக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.