ஆற்காடு, தயாநிதி டெல்லி விரைகின்றனர்
சென்னை:திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முடிவை பிரதமரிடம் தெரிவிக்க ஆற்காடு வீராசாமி இன்று டெல்லி செல்கிறார். அதேபோல பிரதமரைச் சந்திக்க தயாநிதி மாறனும் டெல்லி செல்கிறார்.
நேற்று நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியிலிருந்து நீக்குவதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி செல்கிறார். நிர்வாகக் குழுவின் முடிவை பிரதமரிடம் தெரிவித்து தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமரிடம் அவர் திமுகவின் கோரிக்கையை தெரிவிக்கவுள்ளார்.
இதேபோல தயாநிதி மாறனும் பிரதமரை சந்திக்க இன்று டெல்லி விரைகிறார். அப்படியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க அவர் முயல்வார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications