சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்யா முதலிடம்ரூபிகா 2ம் இடம், 4 பேர் மூன்றாம் இடம்
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் சென்னை மாணவி ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ரூபிகா 1180 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த ஜெயமுருகன், நாமக்கல்லை சேர்ந்த நிவேநிதா, இளவரசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் 1179 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மாணவி ரம்யாவின் மதிப்பெண் பட்டியல்:
தமிழ் -193
ஆங்கிலம்-194
இயற்பியல்-197
வேதியியல்-200
கணிதம்-200
உயிரியல்- 198
மாணவி ரூபிகாவின் மதிப்பெண் பட்டியல்:
தமிழ் -191
ஆங்கிலம்-192
இயற்பியல்-199
வேதியியல்-200
கணிதம்-200
உயிரியல்- 198
மதிப்பெண் சான்றிழ்கள் வரும் 25க்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.