பொன்னேரி ஆற்றி்ல் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:பொன்னேரி அருகே ஆற்றில் அம்மன் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பொன்னேரி அருகே கொற்றமலை ஆற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்றரை அடி உயரத்தில் ஒரு அம்மன் சிலை கிடைத்தது.
இதுகுறித்து உடனே ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சற்குணத்திற்கும், கோட்டாசியர் சங்கீதாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் துணை வட்டாசியர்களும், வருவாய் ஆய்வாளரும் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications