ராதிகாவுக்கு உள்துறையா?-தயங்கிய காங்கிரஸ்!
டெல்லி:ராதிகா செல்விக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் கட்சி மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இருப்பினும் திமுக வலியுறுத்தியதால், அத்துறையை ராதிகாவுக்குத் தர முன் வந்ததாம்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், குறைந்த ஒரு இடத்திற்கு ராதிகா செல்வியை திமுக காங்கிரஸ் தலைமைக்குப் பரிந்துரைத்தது.
ராஜாவுக்கு, தயாநிதி மாறனின் தகவல் தொழில்நுட்பத் துறையையும், ரகுபதிக்கு வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பை ஒதுக்குமாறும், உள்துறை இணை அமைச்சராக ராதிகா செல்வியை நியமிக்குமாறும் திமுக பரிந்துரைத்தது.
இதில் ராஜா, ரகுபதி குறித்து காங்கிரஸுக்கு எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. ஆனால் ராதிகா செல்வி விவகாரத்தில்தான் காங்கிரஸ் தலைமை அதிகம் தயங்கியதாம்.
ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேச பண்ணையார் ஒரு தாதா. அவர் மீது கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில், பண்ணையார் என்கவுண்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் ராதிகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் கொடுக்க காங்கிரஸ் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரத்குமாரை நெருக்கடியில் ஆழ்த்தவும், நாடார் சமுதாயத்தினரை தக்க வைத்துக் கொள்ளவும், ராதிகா செல்வியை (பிடிக்கிறதோ, இல்லையோ) அமைச்சராக்கியே தீர வேண்டிய நிலையில் திமுக இருந்தது.
இதன் காரணமாக ராதிகா செல்விக்கு கண்டிப்பாக இத்துறையைத் தந்தே ஆக வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். இதையடுத்தே அவருக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க முடிவு செய்ததாம் காங்கிரஸ்.
ராதிகா செல்வி பி.ஏ வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் படித்தது பிளஸ்டூ என்கிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சங்கரலிங்க நாடார் பள்ளியில்தான் பிளஸ்டூ படித்துள்ளார் ராதிகா செல்வி. அதன் பிறகு அவர் எங்கு போய் பி.ஏ படித்தார் என்று தெரியவில்லை.
ராதிகா செல்விக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது. இருப்பினும் அவருக்கு இந்தி நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சி 3 நிமிடங்களில் முடிவடைந்தது. பதவியேற்ற பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், ராதிகா செல்வியை இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு ராதிகா செல்வி ஒரு கையால் விஷ் செய்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இரு கைகளால் வணங்கினார்.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட்












Click it and Unblock the Notifications