ராதிகாவுக்கு உள்துறையா?-தயங்கிய காங்கிரஸ்!
டெல்லி:ராதிகா செல்விக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் கட்சி மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இருப்பினும் திமுக வலியுறுத்தியதால், அத்துறையை ராதிகாவுக்குத் தர முன் வந்ததாம்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், குறைந்த ஒரு இடத்திற்கு ராதிகா செல்வியை திமுக காங்கிரஸ் தலைமைக்குப் பரிந்துரைத்தது.
ராஜாவுக்கு, தயாநிதி மாறனின் தகவல் தொழில்நுட்பத் துறையையும், ரகுபதிக்கு வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பை ஒதுக்குமாறும், உள்துறை இணை அமைச்சராக ராதிகா செல்வியை நியமிக்குமாறும் திமுக பரிந்துரைத்தது.
இதில் ராஜா, ரகுபதி குறித்து காங்கிரஸுக்கு எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. ஆனால் ராதிகா செல்வி விவகாரத்தில்தான் காங்கிரஸ் தலைமை அதிகம் தயங்கியதாம்.
ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேச பண்ணையார் ஒரு தாதா. அவர் மீது கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில், பண்ணையார் என்கவுண்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் ராதிகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் கொடுக்க காங்கிரஸ் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரத்குமாரை நெருக்கடியில் ஆழ்த்தவும், நாடார் சமுதாயத்தினரை தக்க வைத்துக் கொள்ளவும், ராதிகா செல்வியை (பிடிக்கிறதோ, இல்லையோ) அமைச்சராக்கியே தீர வேண்டிய நிலையில் திமுக இருந்தது.
இதன் காரணமாக ராதிகா செல்விக்கு கண்டிப்பாக இத்துறையைத் தந்தே ஆக வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். இதையடுத்தே அவருக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க முடிவு செய்ததாம் காங்கிரஸ்.
ராதிகா செல்வி பி.ஏ வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் படித்தது பிளஸ்டூ என்கிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சங்கரலிங்க நாடார் பள்ளியில்தான் பிளஸ்டூ படித்துள்ளார் ராதிகா செல்வி. அதன் பிறகு அவர் எங்கு போய் பி.ஏ படித்தார் என்று தெரியவில்லை.
ராதிகா செல்விக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது. இருப்பினும் அவருக்கு இந்தி நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சி 3 நிமிடங்களில் முடிவடைந்தது. பதவியேற்ற பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், ராதிகா செல்வியை இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு ராதிகா செல்வி ஒரு கையால் விஷ் செய்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இரு கைகளால் வணங்கினார்.
-
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின்












Click it and Unblock the Notifications