Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகாவுக்கு உள்துறையா?-தயங்கிய காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ராதிகா செல்விக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் கட்சி மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இருப்பினும் திமுக வலியுறுத்தியதால், அத்துறையை ராதிகாவுக்குத் தர முன் வந்ததாம்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், குறைந்த ஒரு இடத்திற்கு ராதிகா செல்வியை திமுக காங்கிரஸ் தலைமைக்குப் பரிந்துரைத்தது.

ராஜாவுக்கு, தயாநிதி மாறனின் தகவல் தொழில்நுட்பத் துறையையும், ரகுபதிக்கு வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பை ஒதுக்குமாறும், உள்துறை இணை அமைச்சராக ராதிகா செல்வியை நியமிக்குமாறும் திமுக பரிந்துரைத்தது.

இதில் ராஜா, ரகுபதி குறித்து காங்கிரஸுக்கு எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. ஆனால் ராதிகா செல்வி விவகாரத்தில்தான் காங்கிரஸ் தலைமை அதிகம் தயங்கியதாம்.

ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேச பண்ணையார் ஒரு தாதா. அவர் மீது கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில், பண்ணையார் என்கவுண்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந் நிலையில் ராதிகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையைக் கொடுக்க காங்கிரஸ் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரத்குமாரை நெருக்கடியில் ஆழ்த்தவும், நாடார் சமுதாயத்தினரை தக்க வைத்துக் கொள்ளவும், ராதிகா செல்வியை (பிடிக்கிறதோ, இல்லையோ) அமைச்சராக்கியே தீர வேண்டிய நிலையில் திமுக இருந்தது.

இதன் காரணமாக ராதிகா செல்விக்கு கண்டிப்பாக இத்துறையைத் தந்தே ஆக வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். இதையடுத்தே அவருக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுக்க முடிவு செய்ததாம் காங்கிரஸ்.

ராதிகா செல்வி பி.ஏ வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் படித்தது பிளஸ்டூ என்கிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சங்கரலிங்க நாடார் பள்ளியில்தான் பிளஸ்டூ படித்துள்ளார் ராதிகா செல்வி. அதன் பிறகு அவர் எங்கு போய் பி.ஏ படித்தார் என்று தெரியவில்லை.

ராதிகா செல்விக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது. இருப்பினும் அவருக்கு இந்தி நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.

இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சி 3 நிமிடங்களில் முடிவடைந்தது. பதவியேற்ற பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், ராதிகா செல்வியை இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு ராதிகா செல்வி ஒரு கையால் விஷ் செய்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இரு கைகளால் வணங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+