சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள்பயங்கர சண்டை-20 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு பிரிவினருக்கிடையே நடந்த கடும் மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே அவ்வப்போது உரசல் இருந்து வருவது வழக்கமாம். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கிடையே கடும் மோதல் மூண்டது.
நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 1 மணியளவில் இரு பிரிவினரும் சிறு இரும்புக் குழாய்கள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் 12 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மொத்தமாக 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications