பாக், சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்க இந்தியா எதிர்ப்பு
சென்னை:இலங்கை கடற் படையும், இந்திய கடல் படையும் சேரந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுவது என்பது சத்தியமில்லாதது என பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விவாதிக்க எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது,
தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி என்னிடம் விரிவாக கூறினார். மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்துவேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி உள்பட முக்கிய பகுதிகளில் மீனவர்களுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது சர்வதேச எல்லையை கடப்பது தவிர்க்க முடியாதது. பிழைப்புக்காக செல்லும் மீனவர்களை சுடுவதையும் ஏற்க முடியாது.
தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்து இலங்கை கடற்படையினரிடம் கேட்டபோது. தமிழக மீனவர்களை நாங்கள் சுட்டதும் இல்லை என அவர்கள் கூறினர். மேலும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.
புலிகளை சமாளிக்க பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதை ஏற்க முடியாது. இந்த பிராந்தியத்தில் பெரிய சக்தி இந்தியா. இதனால் தனக்குத் தேவையான ஆயுகங்களுக்கு இந்தியாவைத் தான் இலங்கை தொடர்பு கொள்ள வேண்டும்.
அதை விடுத்து சீனாவையோ பாகிஸ்தானையோ இலங்கை அணுகுவதை இந்தியா ஏற்காது.
தீவிரவாத அமைப்பு என பெயரெடுத்த எல்டிடிஈ வசம் போர் விமானங்கள் இருப்பதை ஏற்க முடியாது. தாக்குதலுக்கு உதவும் எந்த ஆயுதமும் இலங்கைக்கு தரப்படாது. அதே நேரம் ரேடார்கள் போன்ற தற்காப்பு ஆயுதங்களைத் தருவோம்.
இலங்கை கடற் படையும், இந்திய கடல்படையும் இணைந்து கூட்டு ரோந்து செல்வது என்பது சந்தியமற்றது. எனவே புரிந்துணர்வு அடிப்படையில் இரு படைகளுக்கும் தனித்தனியாக பாதுகாப்பில் ஈடுபடலாம் என்றார் நாராயணன்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications