விஜயகாந்த் வெல்வார், முதல்வர் ஆவார்வெற்றி முரசு கொட்டும்-பிரேமலதா
காஞ்சிபுரம்: கோடியில் ஒருவர் விஜயகாந்த். தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும், விஜயகாந்த் முதல்வர் ஆவார், தேமுதிகவின் முரசு சின்னம் விரைவில் வெற்றி முரசு கொட்டும் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேமுதிக மகளிர் அணி சார்பில் மகளிர் சுய உதவி குழு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரேமலதா பேசுகையில், தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது. கல்யாண மண்டபத்தை இடித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் விஜயகாந்த் பயப்படமாட்டார்.
மக்கள் மனதில் அவருக்கு இடம் இடக்கிறது. அவர்களிடமிருந்து அவரை பிரிக்க முடியாது. விஜயகாந்த் கோடியில் ஒருவர்.
நமக்கு யாருடனும் கூட்டணி வேண்டாம், மககள் கூட்டணியே போதும். தேமுதிக விரைவில் ஆட்சியை பிடிக்கும், விஜயகாந்த் முதல்வர் ஆவார். அவருக்கு வெற்றி முரசு கொட்டும்.
தற்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் சமுதாயத்தி்ல பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும். இங்கு தொடங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு பல்வேறு மாவட்டங்களுக்கு தொடரும்.
பெண்களுக்கு எதிராக பெண்களே உள்ளனர். இதை தவிர்க்க வேண்டும். வரதட்சணை, பெண் குழந்தை இறப்பு ஆகியவற்றிற்கு பெண்கள் தான் காரணம், இவற்றை பெண்கள் தடுக்க வேண்டும் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications