மதுரை மேற்கு: தேமுதிகவுக்கு முரசு-28 பேர் களத்தில்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி தேர்தலி்ல் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு அவர் கோரிய முரசு சி்ன்னமே கிடைத்தது.
மதுரை மேற்கு தொகுதியில் வரும் 26ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர்.
சந்திரசேகரன் என்கிற சுயேச்சை வேட்பாளர் வாபஸ் பெற்றார். இதையடுத்து தேர்தல் களத்தில் மொத்தம் 28 வேட்பாளர்கள் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும், அவர்களுக்கான சின்னங்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தேமுதிகவிற்கு முரசு சின்னமும், புதிய தமிழகத்திற்கு மோதிரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.இதனால் அவர்களுக்கு சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் முரசு சின்னத்திலேயே தேமுதிக போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications