மதுரைக்காக நிதி திரட்டும் நெல்லை தேமுதிக
திருநெல்வேலி:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நெல்லை தேமுதிகவினர், கட்சிக்குள்ளேயே தீவிர நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மேற்குத் தொகுதியில், தேமுதிக போட்டியிடுகிறது. இக்கட்சி சார்பில் சிவமுத்துக்குமரன் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும் நிதி பலம், தொண்டர் பலத்துடன் களம் கண்டுள்ள நிலையில், தேமுதிக மக்களை நம்பி மட்டுமே களம் இறங்கியுள்ளது.
இருந்தாலும் கூட வெற்றியை இலக்காகக் கொண்டு அக்கட்சியினர் படு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை தேமுதிகவினருக்கு உதவியாக நெல்லை தேமுதிகவினரும் களம் குதித்துள்ளனர்.
இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நெல்லை தேமுதிகவினர் நிதி சேகரிப்பில் இறங்கியுள்ளனராம். கட்சி நிர்வாகிகளிடமே வசூல் நடத்தி அந்தப் பணத்தைக் கொண்டு சுவரொட்டிகள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யாமல், தங்களு கட்சியினரிடமே நிதி வசூலில் ஈடுபட்டிருக்கும் தேமுதிகவினரின் போக்கு பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்லாது, மதுரை மேற்குத் தொகுதி பிரசாரத்திலும் நெல்லை தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர். 150 வாக்காளர்களுக்கு ஒரு தொண்டர் வீதம் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு அசத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications