சத்துணவில் பல்லி-மாணவர்கள் வாந்தி, மயக்கம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்க வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஏழுசெம்பொன் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். சில மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் சத்துணவை சோதித்து பார்த்தபோது அதில் பல்லி விழந்திருப்பது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்னியூர் சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications