தமிழகத்தில் பெரும் உணவுப் பஞ்சம்:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஒப்புதல்
திருச்சி:
தமிழகத்தில் பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை சரி செய்ய உணவு உற்பத்தியைப் பெருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாகவும் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் விவசாய பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான வேளாண் கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தில பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் பெரும் உணவுப் பஞ்சம் நிலவுகிறது. இதை சரி செய்யும் வகையில் உணவு உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
உற்பத்தியைப் பெருக்க நவீன விவசாய உற்பத்தி முறைகள், குறைந்த செலவிலான வேளாண் உத்திகள், விவசாயிகளுக்கான மானியத்தை உரிய முறையில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 6.24 கோடி மக்களுக்கு 96.04 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன. ஆனால் இன்னும் 19 லட்சம் டன் உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது. அரிசி உற்பத்தி 78.10 லட்சம் டன்னாக இருந்தது. பருப்பு உள்ளிட்டவை 3.65 லட்சம் டன்கள் ஆகும். பிற தானியங்கள் 13.65 லட்சமாக உள்ளது என்றார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications