ஈராக் கார் குண்டுவெடிப்பில் 117 பேர் பலி
ஈராக்: ஈராக்கில் நடந்த லாரி குண்டுவெடிப்பில் 117 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் சதாம் உசேன் கொல்லப்பட்ட பிறகு ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கிடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.
தினசரி ஏதாவது ஒரு குண்டுவெடிப்பு நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஈராக்கின் கிர்குக் நகரின் தெற்கில் உள்ள அம்ரிலி என்ற மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டுகளுடன் வந்த லாரி ஒரு கடையில் மோதியது.
இதில் அந்த மார்க்கெட்டில் இருந்த பல கட்டடங்கள், கடைகள் தரைமட்டமாகின. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 117 பேர் பலியானார்கள். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதே போல் மற்றொரு பகுதியில், இறுதிச் சடங்குக்கு சென்று திரும்பியவர்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் 29பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications