தப்பு செய்ய அஞ்சும் அதிகாரிகளை பிடிக்கும்-விஜயகுமார்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:காவல் துறையில் தப்பு செய்ய அஞ்சும் அதிகாரிகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமார் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் ரைஸ் அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்ட உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
![]() |
நாம் எந்த ஒரு செயலையும் டீமாக இருந்து செய்தால் கண்டிப்பாக வெற்றி பெரும். இதற்கு உதாரணம் என்னுடைய தலைமையில் சந்தனக் கட்டை வீரப்பன் கொட்டத்தை அடியோடு ஒடுக்கிய படை.
வேலையில் இருக்கும்போது நமக்கு தன்னம்பிக்கையும், தொடர்ந்து முயற்சி செய்யும் மனோபாவமும் வேண்டும். நாம் குழு அமைத்து செயல்பட்டால் எந்த தீய சக்தியையும் ஈஸியாக அழித்துவிடலாம்.
டூட்டியில் இருக்கும்போது உடற் பயிற்சிக்கு, படிப்புக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி விடுவேன்.
எந்த ஒரு அதிகாரி தவறு செய்ய பயப்படுகிறாரோ அவர் தான், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்வார். அவரைத்தான் எனக்கு பிடிக்கும். அதனால் தான் அப்படிப்பட்ட ரிடையர்டு அதிகாரிகளை நக்சல் தீவிரவாதிகள் வேட்டையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளேன் என்றார்.













Click it and Unblock the Notifications