அதிமுகவுடன் கூட்டணியா?: கனவில் கூடநினைக்க மாட்டோம்- ஜி.கே.மணி
சென்னை:அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாமகவினர் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சென்னை அருகே மறைமலைநகரில் பாமக இளைஞர் சங்க சீருடை அணிவகுப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ஜி.கே.மணி வந்தார்.
அப்போது அவரிடம் பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வந்தால் கெளரவமாக நடத்தப்படுவார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு ஜி.கே.மணி பதிலளிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு பதிலைத் தந்துள்ளார். ஆனால் அந்த செய்தி நடக்கும் என்று கனவில் கூட பாமகவினர் நினைத்துப் பார்க்க மாட்டார்கள், பார்க்கவும் கூடாது.
திமுக கூட்டணியில் பாமக நீடிக்கும், திமுக அரசுக்கு முழு ஆதரவு தரும் என்று எங்களது தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இது உறுதி.
கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவு சரியாக இருந்தாலும், குற்றச் செயல்களைத் தடுக்க போலீஸார் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார் மணி.












Click it and Unblock the Notifications