சென்னை ஈ.சி.ஆர். சாலையில் கார்-பஸ்-லாரிஅடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மாமல்லபுரம்:சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் ஈ.சி.ஆர். சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.

சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு சென்ற மினி லாரி பட்டிபுலம் என்ற இடத்தில் ரோட்டோரமாக நின்றிருந்தது. அப்போது புதுச்சேரிக்கு சென்ற இன்னொரு லாரியின் டிரைவர் அந்த மினி லாரி நின்றிருப்பதை கவனிக்காமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

மினி லாரியின் அருகே சென்றபோது தான் அது நின்றிருப்பதை உணர்ந்தார். இதையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க லாரியை திடீரென திருப்பினார்.

அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த வேகமாக வந்த கார் டிரைவர், திடீரென மினி லாரியின் பின்னால் இருந்து லாரி வருவதைக் கண்டு அதிர்ந்தார்.

அவர் காரை கட்டுப்படுத்துவதற்குள் லாரி வேகமாக வந்து கார் மீது மோதியது. இருவருமே படு வேகத்தில் ஓட்டியதால் லாரியில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு பறந்தது.

அப்போது சென்னையிலிருந்து நாகபட்டினம் சென்ற பஸ் படு வேகத்தில், லாரியின் பின் பக்கமமாக வந்து மோதியது.

இந்த தொடர் விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். லாரியில் மோதிய பஸ்ஸின் டிரைவர் அதே இடத்திலேயே இறந்துவிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் விபரம்:

பஸ் டிரைவர் கோவிந்தராஜ் மற்றும் காரில் வந்த தி.நகரை சேர்ந்த சந்திரமவுலி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர்.

பார்க்கிங் லைட் கூட போடாமல், பொறுப்பில்லாமல் மினி லாரியை ரோட்டில் நிறுத்தியதால் நேர்ந்த கொடுமை இது. ஈசிஆர் ரோட்டில் விபத்துகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+