பாஜக தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்பு-சுஷ்மா
டெல்லி: பாஜக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிக்கும் பாஜக, மற்றும் கூட்டணி தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக ஷெகாவத்துக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
இதுபோன்ற ஆரோக்கியமற்ற செயல்கள் தேர்தல் ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும்.
நான் என் செல்போனிலிருந்து என் வீட்டிற்கு அழைத்தால் கூட அது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறது. என் வீட்டுக்கும் கட்டுபாட்டு அறைக்கும் என்ன தொடர்புள்ளது.
இதேபோல் பைரோன்சிங் ஷெகாவத் வீட்டு தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா என்பது பற்றி எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையம், ஜனாதிபதி தேர்தலில் இதுபோன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
ஆனால் இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சௌத்ரி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், அவர்கள் பேச்சை கேட்ட என்ன அவசியம் இருக்கிறது. அவர்கள் பேச்சை கேட்டு எங்கள் நேரத்தை நாங்கள் ஏன் வீணடிக்க போகிறோம் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications