தேர்தல் ரத்து: வேடிக்கை, விசித்திரம்-விஜயகாந்த் கண்டனம்
சென்னை:கூட்டணிக் கட்சியினரை திருப்திப்படுத்துதவற்காக கூட்டுறவு சங்கத் தேர்தலை திமுக அரசு ரத்து செய்திருப்பது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு திடீரென கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்து அறிவித்துள்ளது. இது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த அத்துமீறல் பாணியில், திமுக அரசு கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தியது. இதனால் எதிர்க்கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் காட்டிய கைவரிசையை தோழமைக் கட்சியினரிடம் திமுகவினர் காட்டினர். ஆகவே அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கூட்டணிக் கட்சியினரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்து விட்டனர். அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications