திருச்சியில் டெட்டனேட்டர்கள் பறிமுதல்-ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியில் கல்குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்களையும், டெட்டனேட்டர்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
திருச்சி நெடுமலை கிராமத்திலுள்ள ஒரு கல்குவாரியில், தமிழக கியூ பிரிவு போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டதில் ஏராளமான வெடிபொருட்கள் சிக்கின.
மேலும் அங்கு 984 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 570 டெட்டனேட்டர்களும், 120 கிலோ வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் சல்பர் வெடி மருந்தும், 25 கிலோ பிற வெடி மருந்துகளும், 400 மீட்டர் நீள வயரும் கிடைத்தன.
இது தொடர்பாக இந்த வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த ஜேசுராஜ்(45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேசுராஜூவுக்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications