ஜெ-வைகோவுடன் ஜஸ்வந்த் சிங் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் நடந்த சந்திப்பு கனிவான முறையில் இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ஜஸ்வந்த் சிங் சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத்துக்கு அவர் ஆதரவு கோரினார்.

Jayalalitha with Jaswant Singh

இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிங், நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் பேசினேன்.

இங்கு நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை எங்களது கட்சித் தலைவர் அத்வானியிடம் எடுத்துக் கூறுவேன். ஜெயலலிதா எனக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்ததற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது பேச்சு கனிவான முறையில் இருந்தது.

14ம் தேதி டெல்லி செல்லவிருப்பதாகவும், அங்கு மூன்றாவது அணி தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஜெயலலிதா ெதரிவித்தார்.

எங்களது கட்சியின் மதிப்பு மிக்க தலைவரான சுஷ்மா சுவராஜ் தனது டெலிபோன் மத்திய அரசால் ஒட்டுக் ேகட்கப்படுவதாக கூறியுள்ளார். அவர் ராஜ்யசபா துணைத் தலைவராக இருக்கிறார். எனவே அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.

இது எனக்கு வருத்தம் தருகிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவரச நிலை சூழல் நிலவுகிறது. இன்று சுஷ்மாவுக்கு ஏற்படுவது நாளை பிற தலைவர்களுக்கும் ஏற்படும் என்றார் ஜஸ்வந்த் சிங்.

ஜெ.வுடன் வைகோவும் சந்திப்பு:

ஜஸ்வந்த் சிங் சென்ற பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தார்.

இந் நிலையில் இன்று காலை மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தில் வைகோவை ஜஸ்வந்த் சிங் சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் ஜஸ்வந்த் பேசுகையில்,

வைகோவும் நானும் 25 ஆண்டு நண்பர்கள். மக்களவை, மாநிலங்களவையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம்.

வைகோவின் கொள்கைப் பிடிப்பு அரசியல், நேர்மை இரண்டும் பாராட்டத்தக்கவை. நாட்டில் இப்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசவில்லை (அப்படியா..) என்றார்.

பின்னர் வைகோ பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் என்ற பெயரில் அராஜகத்தை நடத்தியுள்ளது திமுக. தனது கூட்டணிக் கட்சியினரைக் கூட போட்டியிட விடவில்லை.

இப்போது திடீர் ஞானோதயம் வந்து தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயகப் படுகொலை நடந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் கலைஞர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+