அப்துல் கலாமுக்கு இரண்டாம் சார்லஸ் விருது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஜனாதிபதி அப்துல் காலமிற்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான் இரண்டாம் சார்லஸ் விருது வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் ராயல் சொசைட்டி சார்பில் இரண்டாம் சார்லஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு பாடுபட்டதை பாராட்டி இந்த விருது ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு வழங்கப்படுகிறது.

Kalam

இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டுகாரர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜப்பான் மன்னர் அகிகிடோவிற்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் தேதி இந்த விருது வழங்கப்பட இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம் அடைந்ததையடுத்து இந்த விழா தள்ளி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் இந்த விருது வழங்கும் விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும் என ராயல் சொசைட்டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறுகையில்,

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையில் முதலீடுகள் அதிகரித்து வரும் நேரத்தில் அப்துல் கலாம் நாட்டை வழி நடத்தினார். வளரும் நாடுகள் அந்தஸ்திலிருந்து இந்தியாவை வளர்ந்த நாடுகள் வரிசையில் இடம் பிடிக்க வழி முறைகளை வகுத்துக் கொடுத்தவர் அவர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+