பாளையங்கோட்டையில் வக்கீல்களுக்கு பயிலரங்கு
Subscribe to Oneindia Tamil
பாளையங்கோட்டை:பாளையங்கோட்டையில் வழக்கறிஞர்களுக்கான பயிலரங்கை வரும் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தொடங்கி வைக்கிறார்.
பாளையங்கோட்டை சாந்திநகர் டி.இ.எஸ்.கே. மஹாலில் நடக்கும் இந்த பயிலரங்கில் வழக்குகளுக்கு மாற்று வழியில் தீர்வு காண்பது குறித்த நீதிபதி ஏ.பி.ஷா உரையாற்றுவார். விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்திர மோகன், நெல்லை மேயர் ஏ.எல்.பாலசுப்பரமணியன், நெல்லை வழக்கறிஞர்கள்ள்சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும், வக்கீல்கள் சங்கமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications