டிவிக்களுக்கு லைசென்ஸ் கட்டணம்-அரசு பல்டி
டெல்லி:தொலைக்காட்சிகளுக்கு உரிம கட்டணம் (லைசென்ஸ் பீஸ்)வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட மத்திய அரசின் தொலைக்காட்சி, வானொலி சேவைகளை பிரச்சார் பாரதி நிறுவனம் நடத்தி வருகிறது. இந் நிறுவனம் கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது.
இதையடுத்து புதிய வண்ணத் தொலைகாட்சி பெட்டி வாங்குபவர்களிடம் இருந்து தலா ரூ.500ம், கருப்பு-வெள்ளை தொலைகாட்சிப் பெட்டி வாங்குபவர்களிடமிருந்து ரூ.200ம் உரிம கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஆண்டுதோறும் ஒரு தொகையை லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டது.
இது குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருந்தது.
ஆனால், இதனால் பொது மக்களின் நேரடி அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என பெரும்பாலான அைமச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இத் திட்டத்தை கைவிட்டுள்ளது மத்திய அரசு.
தொலைக்காட்சிக்கு உரிம கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications