மன்மோகன் சிங்-ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்சுடன் தொலைபேசியில் பேசினார்.

ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துவது என்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.

Manmohan Singh

இதன் மூலம் இந்தியாவில் மின்சார உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் அமெரிக்கா வழங்கும்.

ஆனால் அமெரிக்கா வழங்கும் எரிபொருளை பயன்படுத்தியபின் அதை மறுசுழற்சிக்கு இந்தியா பயன்படுத்தக் கூடாது எனவும், அணு குண்டு சோதனையை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒப்பந்தம் சிக்கலாகியுள்ளது.

Bush

இதுகுறித்து கடந்த மாதம் ஜெர்மனியில் ஜீ-8 மாநாட்டில் மன்மோகன் சிங்கும், புஷ்சும் பேச்சு நடத்தினர்.

மேலும் வாஷிங்டனில் வரும் 16ம் தேதி இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளர் நாராயணனும், அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஸ்டீபன் ஹார்ட்லியும் இந்த ஒப்பந்தத்தின் முட்டுக்கட்டைகளை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் புஷ்சுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களை பற்றி பேசிய அவர்கள், செப்டம்பர் மாதம் இருவரும் சந்திப்பு என முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரூ தெரிவிக்கையில்,

பிரதமரும் புஷ்ஷூம் தொலைபேசியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மனம் திறந்து பேசினர். இரு நாட்டு தேசிய பாதுகாப்பு செயலாளர்களும் சந்தித்து முடித்த பின் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ் இந்தியா வரவிருக்கிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+