கலெக்டர் அலுவலகம் முன் டிரைவர்கள் அங்கபிரதட்சணம்!!!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:பணி நிரந்தரம் செய்ய கோரி நாகர்கோவிலில் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்தனர்கள் கலெக்டர் ஆபிஸ் முன்பு சட்டையின்றி உருண்டனர்.
![]() |
தற்காலிகமாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சமீபத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்துத் துறைக்கு புதிதாக பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்தவர்கள் தான் முன்னுரிமை அடிப்படையில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த பணித் தேர்வில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களை பரீசலிக்காமல் புதியதாக ஆட்களை தேர்வு செய்வதை எதிர்த்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நேற்று பாதிக்கப்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் வித்தியாசமாக போராட்டம் நடத்தினர்.
தரையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தல், பிச்சை எடுத்தல், சங்கு ஊதுதல், மற்றும் கோரிக்கையை நிறைவேற்ற ஆராய்ச்சி மணி அடித்தல் ஆகிய போராட்டங்களில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications