பெண்ணை ஏமாற்றினாரா தலைவர் மூமுக சேதுராமன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:விவகாரத்தான பெண்ணை மூ.மு.க நிறுவனர் டாக்டர் சேதுராமன் ஏமாற்றிவிட்டார்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(36). ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு திருமண மையத்தில் தன் பெயரை மறுமணத்திற்காக பதிவு செய்திருந்தார்.

இந்த திருமண தகவல் மையத்தின் உரிமையாளர் பாலச்சந்திரன் சீதாலட்சுமியிடம், உனக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமனை கல்யாணம் செய்ய விருப்பமா? எனக் கேட்டுள்ளார்.

மேலும் சேதுராமன் ஏற்கனவே திருமணம் ஆகி நல்ல வசதி வாய்ப்போடு இருக்கிறார். சரி என்று சொன்னால் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என பாலச்சந்திரன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதில் மயங்கிய சீதாலட்சுமியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சேதுராமனும், சீதாலட்சுமியும் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது சேதுராமன், நீ என் அலுவலகத்தில் வேலை செய். பின்னர் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சீதாலட்சுமி 1 மாதம் சேதுராமனின் அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளார். கடைசியில் சேதுராமனுக்கு தனக்கு விருப்பமில்லை என்று கூறி சீதாலட்சுமியை கழட்டி விட்டதாக சொல்கிறார்கள்.

இதையடுத்து சீதாலட்சுமி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தந்த புகாரில், என்னை கல்யாணம் செய்கிறேன் என்று சொல்லி சேதுராமன் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் மூ.மு.க. நிறுவனர் டாக்டர் சேதுராமன் மீது போலீஸார் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சேதுராமனின் டிரைவர் மற்றும் திருமண மைய உரிமையாளர் பாலச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சேதுராமனிடம் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாராம்.

அவர் திரும்பி வந்தவுடன் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+