காந்தியின் பேரன் துணை ஜனாதிபதியாவாரா?
டெல்லி:துணை ஜனாதிபதி பதவியில் சிறுபான்மை இனத்தவரை அமர்த்த இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
முதலில் சோம்நாத் சாட்டர்ஜி, பின்னர் ஏ.பி.பர்தான் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு அடிபட்டன. ஆனால், இருவருமே இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இப் பதவியில் அமர்த்த இடதுசாரிகள் முடிவு செய்துள்ளதாக ெடல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது. துணை ஜனாதிபதிக்கான தேர்தலுக்கும் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது.
இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில்,
நாங்கள் இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் பிரதீபா பாட்டீலை வெற்றி பெறச் செய்வதற்காக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இன்னும் துணை ஜனாதிபதி வேட்பாளரை பற்றி முடிவெடுக்கவில்லை. எங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து டெல்லியில் தினமும் முக்கிய ஆலோசனை நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவர்களின் ஆலோசனையில் முஷிருல் ஹசன் பெயர் முதலிடத்தில் உள்ளது.
சிறந்த வரலாற்று அறிஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்து வருகிறார். இதை நிறுவியர் முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஆவார்.
மேலும 1970ம் ஆண்டிலிருந்து மேற்கு வங்க சட்டசபையின் சபாநாயகராக உள்ள அப்துல் ஹலீமின் பெயரும் அடிபடுகிறது. கம்யூனிஸ்ட் என்றாலும் நடுநிலையான கொள்கைகள் கொண்ட இவர் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் தோழராவார்.
சிறுபான்மை இனத்தவரான அப்துல் கலாமை ஆதரிக்காததால் தங்கள் மீது இஸ்லாமியர்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதும் இடதுசாரிகள் அதை சரிகட்டவே சிறுபான்மை இனத்தவரை நிற்க வைக்க முயல்வதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மகாத்மா காந்தி மற்றம் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை நிற்க வைக்கவும் காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications