போலி ஆவணம் தந்து வங்கியில் ரூ. 1 கோடிமோசடி: சேலம் தொழிலதிபர் கைது!
சென்னை:சென்னையில் உள்ள தனியார் வங்கியில் போலி நில பத்திரங்களைக் கொடுத்து ரூ. 1 கோடி கடன் பெற்ற சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மீரா மத்திய குற்றப் பிரிவுவின் வங்கி மோசடி தடுப்பு பிரில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில்,
சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் சசிகுமார்(32) தன்னிடமிருந்த சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து எங்கள் வங்கியில் ரூ. 1 கோடி பணம் பெற்றார். அவர் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்தபோது அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது. எனவே சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் சசிகுமாரை சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
அங்கு பருப்பு மில் வைத்துள்ளார் சசிகுமார். இவரது நண்பர் பாபு என்பவர் நில புரோக்கராக இருக்கிறாராம். அவர் தான் தனக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாபு தயாரித்த பத்திரங்கள் அனைத்தும் சம்பத் மற்றும் சின்னப்ப கவுண்டர் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தின் பத்திரங்கள் ஆகும். இதை சசிகுமார் பெயருக்கு போலியாக தயாரித்து தந்துள்ளார் பாபு.
இப்போது புரோக்கர் பாபு தலைமறைவாகி விட்டார். போலீஸ் அவரைத் தேடி வருகிறது.
பாபுவை பிடித்தால் இது போன்று எத்தனை பேருக்கு போலி பத்திரம் தயார் செய்து வங்கிளில் லோன் ேமாசடி செய்ய உதவினார் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications