து.ஜனாதிபதி-பாஜக போட்டியா? இன்று முடிவு
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இன்று முடிவெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் ஷெகாவத்தை வெற்றி பெற வைக்க பாஜக பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் ஷெகாவத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முக்கியமாக 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துவிட்டனர். அதில் ஜெயலலிதா-வைகோ மட்டும் தனி முடிவெடுத்து ஷெகாவத்தை ஆதரித்து வாக்களித்தது தனி கதை.
இந் நிலையில் துணை ஜனாதிபதிக்கு 3வது அணி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது.
இவருக்கு பாஜக கூட்டணி ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தங்களுக்கு ஆதரவு கொடுக்காத 3வது அணிக்கு பதிலடி தரும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தலையே பாஜக புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முடிவெடுக்க டெல்லியில் மாஜி பிரதமர் வாஜ்பாயின் வீட்டில் பாஜக கூட்டணி தலைவர்கள் இன்று கூடுகின்றனர்.












Click it and Unblock the Notifications