ஏர் டெக்கான்: சிறுசு போய் பெருசு வருது!
சென்னை:தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய விமான நிறுவனமான ஏர் டெக்கான் தன்னிடம் உள்ள சிறிய ரக விமானங்களை ஓரம் கட்டி விட்டு பெரிய விமானங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மிக வேகமாக வளரும் விமான நிறுவனமாக ஏர் டெக்கான் விளங்குகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவிலான விமான சேவைகள் மற்றும் விமானங்களைக் கொண்டுள்ள நிறுவனம் ஏர் டெக்கான்தான்.
இந்த நிலையில் தன்னுடைய சேவையை ஏர் டெக்கான் விரிவுபடுத்தியுள்ளது.
சென்னை-மதுரை, சென்னை-கோவை மார்க்கத்தில், இதுவரை பயன்படுத்தி வந்த 72 பேர் அமரக் கூடிய ஏடிஆர்-72 ரக விமானத்திற்குப் பதிலாக தற்போது 180 பேர் அமரக் கூடிய ஏர்பஸ் ஏ-320 விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் தலைவர் கோபிநாத் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராம்கி சுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்த வசதிகள் தவிர சென்னை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் புதிதாக ஒரு மாலை நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீட் எண்ணிக்கையைப் பொருத்தவரை, தென்னகத்திலேயே முன்னணியில் உள்ளது ஏர் டெக்கான். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிப்பதில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது ஏர் டெக்கான்.
திருவனந்தபுரம், மதுரை, கோவை போன்ற நகரங்களில் எங்களது விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நகரங்களின் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
இந்த நகரங்கள் தகவல் தொழில்நுட்ப நகரங்களாகவும், நவீன நகரங்களாகவும் மாறி வரும் நிலையில், எங்களது குறைந்த கட்டண விமான சேவைக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications